ஐபிஎல் போட்டியிலிருந்து ரஹானே விலகுகிறாரா?
கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி வீரர் ரஹானே, காயம் காரணமாக ஐபிஎல் போட்டியிலிருந்து விலகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி வீரர் ரஹானே, காயம் காரணமாக ஐபிஎல் போட்டியிலிருந்து விலகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஐபிஎல் ஏலத்தில் ரஹானேவை ரூ. 1 கோடிக்குத் தேர்வு செய்தது கேகேஆர் அணி. இந்த வருடம் 7 ஆட்டங்களில் விளையாடி 133 ரன்கள் எடுத்துள்ளார். ஸ்டிரைக் ரேட் - 103.91.
இந்நிலையில் காயம் காரணமாக ஐபிஎல் போட்டியிலிருந்து ரஹானே விலகியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக விளையாடும்போது ஏற்பட்ட காயத்தால் இந்நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கரோனா தடுப்பு வளையத்திலிருந்து அவர் வெளியேறவுள்ளார்.
Advertisement
Advertisement
இந்தக் காயம் காரணமாக இங்கிலாந்துச் சுற்றுப்பயணத்தில் ரஹானே இடம்பெறுவது கடினம் என்றும் கூறப்படுகிறது. பெங்களூரில் உள்ள நேஷனல் கிரிக்கெட் அகாதெமியில் காயத்துக்கான சிகிச்சையை அவர் மேற்கொள்ளவுள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.