ஹார்திக் பாண்டியா  படம் | ஐபிஎல்
ஐபிஎல்

கேப்டனாக நியமிக்கப்பட்டது ஹார்திக் பாண்டியாவின் தவறல்ல: சௌரவ் கங்குலி

DIN

மும்பை இந்தியன் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டது ஹார்திக் பாண்டியாவின் தவறல்ல என இந்திய அணியின் முன்னாள் வீரர் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹார்திக் பாண்டியா நியமிக்கப்பட்டதற்கு ரசிகர்கள் பலரும் அவரை கடுமையாக விமர்சித்து வந்தனர். போட்டிகளின்போதும் ஹார்திக் பாண்டியா ரசிகர்களின் கேலி கிண்டல்களுக்கு ஆளானார்.

இந்த நிலையில், ரசிகர்கள் ஹார்திக் பாண்டியாவை கேலி செய்யக் கூடாது எனவும், மும்பை இந்தியன் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டது ஹார்திக் பாண்டியாவின் தவறல்ல எனவும் இந்திய அணியின் முன்னாள் வீரர் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

சௌரவ் கங்குலி

இது தொடர்பாக அவர் பேசியதாவது: ரசிகர்கள் ஹார்திக் பாண்டியாவை தேவையில்லாமல் விமர்சிப்பதும், கேலி செய்வதும் கூடாது என நினைக்கிறேன். அது சரியல்ல. மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் அந்த அணியின் கேப்டனாக ஹார்திக் பாண்டியாவை நியமித்துள்ளது. விளையாட்டில் கேப்டன்சி மாற்றங்கள் என்பது நடக்கக் கூடியதுதான். நீங்கள் இந்திய அணியை வழிநடத்தினாலும், ஒரு மாநிலத்தின் கிரிக்கெட் அணியை வழிநடத்தினாலும், டி20 லீக் தொடரின் அணியை வழிநடத்தினாலும் நீங்கள் கேப்டனாகவே நியமிக்கப்பட்டுள்ளீர்கள்.

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ரோஹித் சர்மா சிறப்பாக செயல்பட்டுள்ளார். மும்பை இந்தியன்ஸ் மற்றும் இந்திய அணிக்காக கேப்டனாகவும், ஒரு வீரராகவும் தனது சிறப்பான பங்களிப்பை அவர் வழங்கியுள்ளார். மும்பை அணியின் கேப்டனாக ஹார்திக் பாண்டியா நியமிக்கப்பட்டதில் அவரது தவறு ஒன்றுமில்லை. நாம் அனைவரும் அதனை புரிந்துகொள்ள வேண்டும் என்றார்.

ஐபிஎல் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் நாளை (ஏப்ரல் 7) நடைபெறவுள்ள போட்டியில் மும்பை இந்தியன்ஸ், தில்லி கேப்பிடல்ஸை எதிர்த்து விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோட்டை 7 முக்தி அளிக்கும் சக்தி பீடங்கள்...!

சென்னிமலை முருகனுக்கு பாலாபிஷேக பெரு விழா

அதிக லாபத்துடன் இயங்கும் சுப்ரமணிய சிவா கூட்டுறவு சா்க்கரை ஆலை

ஒகேனக்கல்லில் ஆடிப் பெருக்கு விழா: ரூ. 1.07 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவி அமைச்சா் வழங்கினாா்

‘எண்ணும் எழுத்தும்’ திட்டம்: கண்காணிப்பு அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவு

SCROLL FOR NEXT