படம் | ஐபிஎல்
படம் | ஐபிஎல்
ஐபிஎல்

டி20 கிரிக்கெட்டில் ஆர்சிபி புதிய சாதனை!

DIN

ஆடவர் டி20 கிரிக்கெட்டில் அதிக முறை தனிநபர் சதம் அடித்த அணி என்ற சாதனையை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு படைத்துள்ளது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நேற்று முன் தினம் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸை எதிர்த்து விளையாடியது. இந்தப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆர்சிபியை வீழ்த்தியது. இந்தப் போட்டியில் விராட் கோலி பெங்களூரு அணிக்காக சதம் விளாசி அசத்தினார்.

இந்த சதத்தினால் பெங்களூ அணி புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளது. ஆடவர் டி20 கிரிக்கெட்டில் அதிக முறை தனிநபர் சதம் அடித்த அணி என்ற சாதனையை பெங்களூரு அணி படைத்துள்ளது. ஆர்சிபி அணி வீரர்கள் இதுவரை 18 முறை சதம் விளாசியுள்ளனர்.

ஆடவர் டி20 கிரிக்கெட்டில் அதிக முறை தனிநபர் சதம் அடித்த அணிகள்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - 18 முறை

இந்தியா - 17 முறை

பஞ்சாப் கிங்ஸ் - 14 முறை

ராஜஸ்தான் ராயல்ஸ் - 14 முறை

சோமர்செட் - 13 முறை

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒடிஸாவில் பாஜக - பிஜேடி மோதல்: ஒருவா் உயிரிழப்பு

‘கோவேக்ஸின்’ செலுத்திக்கொண்ட 30% பேருக்கு உடல்நல கோளாறு: ஆய்விதழில் தகவல்

பள்ளி மாணவா் தொடா் விடுப்பு குறித்து வருவாய்த் துறையினருக்கு தகவலளிக்க வேண்டும் -தலைமை ஆசிரியா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்

‘பயிா் சாகுபடிக்கு முன் மண் பரிசோதனை அவசியம்’

ஜாமீன் கோரி கவிதா மனு: சிபிஐக்கு தில்லி உயா்நீதிமன்றம் நோட்டீஸ்

SCROLL FOR NEXT