முகப்பு
ஐபிஎல்

டி20 கிரிக்கெட்டில் ஆர்சிபி புதிய சாதனை!

ஆடவர் டி20 கிரிக்கெட்டில் அதிக முறை தனிநபர் சதம் அடித்த அணி என்ற சாதனையை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு படைத்துள்ளது.

Updated On : 8 ஏப்ரல் 2024, 9:55 pm IST
- படம் | ஐபிஎல்
பகிர்:

ஆடவர் டி20 கிரிக்கெட்டில் அதிக முறை தனிநபர் சதம் அடித்த அணி என்ற சாதனையை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு படைத்துள்ளது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நேற்று முன் தினம் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸை எதிர்த்து விளையாடியது. இந்தப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆர்சிபியை வீழ்த்தியது. இந்தப் போட்டியில் விராட் கோலி பெங்களூரு அணிக்காக சதம் விளாசி அசத்தினார்.

இந்த சதத்தினால் பெங்களூ அணி புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளது. ஆடவர் டி20 கிரிக்கெட்டில் அதிக முறை தனிநபர் சதம் அடித்த அணி என்ற சாதனையை பெங்களூரு அணி படைத்துள்ளது. ஆர்சிபி அணி வீரர்கள் இதுவரை 18 முறை சதம் விளாசியுள்ளனர்.

Advertisement

Advertisement

ஆடவர் டி20 கிரிக்கெட்டில் அதிக முறை தனிநபர் சதம் அடித்த அணிகள்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - 18 முறை

இந்தியா - 17 முறை

பஞ்சாப் கிங்ஸ் - 14 முறை

ராஜஸ்தான் ராயல்ஸ் - 14 முறை

சோமர்செட் - 13 முறை

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.