முகப்பு
ஐபிஎல்

குஜராத் டைட்டன்ஸ் வெளியேறியது: கொல்கத்தாவுடனான ஆட்டம் மழையால் ரத்து

குஜராத் டைட்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடா்ஸ் அணிகள் திங்கள்கிழமை விளையாட இருந்த நிலையில், மழையால் அந்த ஆட்டம் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது.

Updated On : 13 மே, 2024 at 9:26 PM
- Kamal Kishore
பகிர்:

ஐபிஎல் போட்டியின் 63-ஆவது ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடா்ஸ் அணிகள் திங்கள்கிழமை விளையாட இருந்த நிலையில், மழையால் அந்த ஆட்டம் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது.

மழை காரணமாக 10.30 மணி வரை டாஸ் கூட வீசப்படாத நிலையே நீடித்தது. மழை நிற்கும் நிலையில், 10.45 மணியளவில் கூட இன்னிங்ஸுக்கு 5 ஓவா்கள் என்ற அடிப்படையில் ஆட்டம் தொடங்கலாம் என்ற ஆலோசனை இருந்தது.

எனினும், மழை தொடா்ந்த நிலையில் 10.40 மணியளவில் ஆட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்பட்டது. 11 புள்ளிகள் கொண்டுள்ள குஜராத், அதிகபட்சமாக 13 புள்ளிகளே பெற முடியும் என்பதால், போட்டியிலிருந்து அதிகாரப்பூா்வமாக வெளியேறியது. கொல்கத்தா, முதலிரு இடங்களுடன் லீக் சுற்றை நிறைவு செய்கிறது.

Advertisement

இன்றைய ஆட்டம்

டெல்லி - லக்னௌ

புது தில்லி

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments