FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கிரிக்கெட்

ஐபிஎல் 2026: 154 கி.மீ/மணி வேகத்தில் பந்துவீசிய குஜராத் வீரர்!

குஜராத் டைட்டன்ஸ் வீரர் அசோக் சர்மா வீசிய வேகப்பந்து குறித்து...

Updated On : 5 ஏப்ரல் 2026, 2:24 pm IST
அசோக் சர்மா. - படம்: குஜராத் டைட்டன்ஸ்.
பகிர்:

ஐபிஎல் 2026 சீசனிலேயே குஜராத் டைட்டன்ஸ் வீரர் அசோக் சர்மா அதிவேகமாக பந்துவீசியுள்ளார். ராஜஸ்தானி பிறந்த 23 வயதான அசோக் சர்மா 154.2 கிமீ/மணி வேகத்தில் பந்து வீசி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்களில் 210/6 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய குஜராத் அணி 20 ஓவர்களில் 204/8 ரன்கள் எடுத்து தோல்வியுற்றது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணியின் வீரர் அசோக் சர்மா 15.5ஆவது ஓவரின்போது ஓவர்களில் 154.2 கிமீ/மணி வேகத்தில் பந்து வீசி அசத்தினார். யார்க்கர் பந்தாக வீசிய இந்தப் பந்தில் ரன் ஏதும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

முன்னதாக லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் ஆன்ரிச் நோர்க்யா 150.0 கி.மீ./மணி வேகத்தில் பந்துவீசி இருந்தார். கொல்கத்தாவின் கார்த்திக் தியாகி 149.7 கி.மீ./மணி வேகத்தில் பந்துவீசி இருந்தார்.

ஐபிஎல் வரலாற்றில் 2011ல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு விளையாடிய ஷான் டைட் 157.71 கி.மீ./மணி வேகத்தில் பந்துவீசி முதலிடத்தில் இருக்கிறார்.

ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக பந்துவீசியவர்கள்

1. ஷான் டைட் - 157.71 கி.மீ./மணி (ராஜஸ்தான், 2011)

2. லாக்கி பெர்குசன் - 157.3 கி.மீ./மணி (குஜராத், 2022)

3. உம்ரான் மாலிக் - 157 கி.மீ./மணி (சன்ரைசர்ஸ், 2022)

4. மயங்க் யாதவ் - 156.7 கி.மீ./மணி (லக்னௌ, 2024)

5. ஆன்ரிச் நோர்க்யா- 156.2 கி.மீ./மணி (தில்லி கேபிடல்ஸ், 2020)

6. அசோக் சர்மா - 154.2 கி.மீ./மணி ( குஜராத் டைட்டன்ஸ், 2026)

summary

GT vs RR: Ashok Sharma delivers fastest ball of IPL 2026.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments