முகப்பு
ஐபிஎல்

நூர் அகமதை பாராட்டிய இந்திய சுழற்பந்துவீச்சாளர்!

ஆப்கானிஸ்தான் அணியின் சுழற்பந்துவீச்சாளர் நூர் அகமதை இந்திய அணியின் பிரபல சுழற்பந்துவீச்சாளர் பாராட்டியுள்ளார்.

Updated On : 4 ஏப்ரல் 2025, 7:49 pm IST
நூர் அகமது - படம் | ஐபிஎல்
பகிர்:

ஆப்கானிஸ்தான் அணியின் சுழற்பந்துவீச்சாளர் நூர் அகமதை இந்திய அணியின் பிரபல சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் பாராட்டியுள்ளார்.

ஆப்கானிஸ்தான் அணியில் இளம் சுழற்பந்துவீச்சாளர்களில் ஒருவரான நூர் அகமது, ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில், நூர் அகமது தனது அபார பந்துவீச்சின் மூலம் 9 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலிலும் முதலிடத்தில் உள்ளார்.

குல்தீப் யாதவ் பாராட்டு

Advertisement

Advertisement

சிஎஸ்கே அணிக்காக நூர் அகமது அபார பந்துவீச்சை வெளிப்படுத்தி வரும் நிலையில், நூர் அகமது அனைவரிடமிருந்து கற்றுக்கொள்ள விரும்புவதாக குல்தீப் யாதவ் அவரை பாராட்டியுள்ளார்.

நூர் அகமது குறித்து குல்தீப் யாதவ் பேசியதாவது: நூர் அகமது மிகவும் நன்றாக பந்துவீசுகிறார். அவரை தனிப்பட்ட முறையில் எனக்கு நன்றாக தெரியும். அவர் அனைவரிடமிருந்தும் கற்றுக்கொள்ள விரும்பும் நபர். போட்டி நிறைவடைந்த பிறகு இரவு நீண்ட நேரம் நாங்கள் பேசியிருக்கிறோம். நூர் அகமதுவுடன் அமர்ந்து லெக் ஸ்பின் குறித்து நீண்ட நேரம் ஆலோசனை மேற்கொண்டுள்ளேன். நூர் அகமது பந்துவீச்சில் வேகம் இருக்கும். அதனால், அவரது பந்துவீச்சில் பேட்ஸ்மேன்கள் அவ்வளவு எளிதாக ரன்கள் குவித்துவிட முடியாது. அதிலும் குறிப்பாக, சென்னை சேப்பாக்கம் திடலில் அவரது பந்துவீச்சுக்கு எதிராக விளையாடுவது மிகவும் கடினம் என்றார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் சேப்பாக்கம் திடலில் நாளை (ஏப்ரல் 5) நடைபெறும் போட்டியில் தில்லி கேபிடல்ஸை எதிர்த்து விளையாடவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments