சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
ஐபிஎல் தொடரில் ஹைதராபாதில் நடைபெறும் இன்றையப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடுகின்றன.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஷுப்மன் கில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். இதனையடுத்து, சன்ரைசர்ஸ் முதலில் பேட் செய்கிறது.
இன்றையப் போட்டியில் உடல்நலக் குறைவு காரணமாக சன்ரைசர்ஸ் அணியில் ஹர்ஷல் படேல் விளையாடவில்லை. அவருக்குப் பதிலாக ஜெயதேவ் உனத்கட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதையும் படிக்க: கொஞ்சம் கொஞ்சமாக தகர்கிறதா சிஎஸ்கேவின் கோட்டை?
அதிரடி விளையாடுவதை வழக்கமாகக் கொண்ட ஹைதராபாத் அணி, கடந்த இரண்டு போட்டிகளில் 163 ரன்கள் மற்றும் 120 ரன்களுக்கு முறையே ஆட்டமிழந்தது.
இந்த நிலையில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் இன்றையப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்வதால் தனது வழக்கமான அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 300 ரன்களைக் குவித்து வரலாறு படைக்குமா? அல்லது மீண்டும் ஒரு முறை குறைந்த ரன்களில் ஆட்டமிழக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.