ஐபிஎல் 2025-இல் அதிக ரன்கள்: முதலிடம் பிடித்த தமிழன் சாய் சுதர்சன்!
நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் அடித்த தமிழக வீரர் குறித்து...
நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார் சாய் சுதர்சன்.
தமிழகத்தைச் சேர்ந்த இவர் தற்போது குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.
கடந்த போட்டியில் ஒரே திடலில் தொடர்ச்சியாக 5 அரைசதங்கள் அடித்த ஏபிடி வில்லியர்ஸின் சாதனையை சமன்செய்திருந்தார்.
Advertisement
Advertisement
அத்துடன் ஐபிஎல் தொடரில் 1,000 ரன்களுக்கு அதிகமாக அடித்தவர்களில் அதிகமான சராசரியுடன் சாய் சுதர்சன் முதலிடத்தையும் பிடித்துள்ளார்.
இந்நிலையில், லக்னௌ அணிக்கு எதிரான ஆட்டத்தில் பேட்டிங் செய்து வரும் குஜராத் அணி 7 ஓவர்கள் முடிவில் 67/0 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தப் போட்டியில் சாய் சுதர்சன் 18 பந்துகளில் 30 ரன்கள் எடுத்துள்ளார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் 300 ரன்களை கடந்து விளையாடி வருகிறார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள்
1. சாய் சுதர்சன் - 303*
2. நிகோலஸ் பூரன் - 288
3. மிட்செல் மார்ஷ் - 285
4. அஜிங்க்யா ரஹானே - 204
5. ஜாஸ் பட்லர் - 202
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.