சாய் சுதர்சன் படம்: எக்ஸ் / குஜராத் டைட்டன்ஸ்.
ஐபிஎல்

ஐபிஎல் 2025-இல் அதிக ரன்கள்: முதலிடம் பிடித்த தமிழன் சாய் சுதர்சன்!

நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் அடித்த தமிழக வீரர் குறித்து...

DIN

நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார் சாய் சுதர்சன்.

தமிழகத்தைச் சேர்ந்த இவர் தற்போது குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

கடந்த போட்டியில் ஒரே திடலில் தொடர்ச்சியாக 5 அரைசதங்கள் அடித்த ஏபிடி வில்லியர்ஸின் சாதனையை சமன்செய்திருந்தார்.

அத்துடன் ஐபிஎல் தொடரில் 1,000 ரன்களுக்கு அதிகமாக அடித்தவர்களில் அதிகமான சராசரியுடன் சாய் சுதர்சன் முதலிடத்தையும் பிடித்துள்ளார்.

இந்நிலையில், லக்னௌ அணிக்கு எதிரான ஆட்டத்தில் பேட்டிங் செய்து வரும் குஜராத் அணி 7 ஓவர்கள் முடிவில் 67/0 ரன்கள் எடுத்துள்ளது.

இந்தப் போட்டியில் சாய் சுதர்சன் 18 பந்துகளில் 30 ரன்கள் எடுத்துள்ளார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் 300 ரன்களை கடந்து விளையாடி வருகிறார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள்

1. சாய் சுதர்சன் - 303*

2. நிகோலஸ் பூரன் - 288

3. மிட்செல் மார்ஷ் - 285

4. அஜிங்க்யா ரஹானே - 204

5. ஜாஸ் பட்லர் - 202

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லி: முந்திரி திருட்டு வழக்கில் 4 பேர் கைது, 440 கிலோ மீட்பு

கனரா வங்கியில் பட்டதாரிகளுக்கு உதவித்தொகையுடன் தொழில்பழகுநர் பயிற்சி!

அக். 16 - 18ல் வடகிழக்கு பருவமழை தொடங்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம்

ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 5000 ரன்களைக் கடந்து ஸ்மிருதி மந்தனா சாதனை!

ரயில்வேயில் விளையாட்டு வீரர்களுக்கு வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

SCROLL FOR NEXT