படம் | ஆர்சிபி (எக்ஸ்)
ஐபிஎல்

ஆர்சிபி பந்துவீச்சு; முதல் முறையாக அணியின் கேப்டனாக ஜித்தேஷ் சர்மா!

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

DIN

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

ஐபிஎல் தொடரில் லக்னௌவில் நடைபெறும் இன்றையப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் விளையாடுகின்றன.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் ஜித்தேஷ் சர்மா பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். இதனையடுத்து, சன்ரைசர்ஸ் முதலில் பேட் செய்கிறது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் தேவ்தத் படிக்கல்லுக்குப் பதிலாக மயங்க் அகர்வால் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளார். ரஜத் படிதார் இம்பாக்ட் வீரர்களுக்கான தெரிவாக அணியில் உள்ளார்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் டிராவிஸ் ஹெட், அபினவ் மனோகர் மற்றும் ஜெயதேவ் உனத்கட் மீண்டும் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக பஞ்சாப் கிங்ஸை ஜித்தேஷ் சர்மா கேப்டனாக வழிநடத்தியுள்ளார்.

ஜித்தேஷ் சர்மா முதல் முறையாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை கேப்டனாக வழிநடத்துவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கள்ளக்குறிச்சியில் நிறைவுற்ற வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் தொடங்கிவைப்பு

பிரபல யூடியூபா் வீட்டின் முன் குற்றச்சாட்டு: 2 போ் கைது

இணையவழி வா்த்தகத்துக்கு எதிராக திருச்சியில் ஆக.30-இல் முற்றுகைப் போராட்டம்: விக்கிரமராஜா

17 வகையான சிறப்பு மருத்துவ நிபுணா்கள் மூலம் சேவைகள்: கள்ளக்குறிச்சி ஆட்சியா் தகவல்

‘கைப்பேசிக்கு வரும் குறுஞ்செய்தி லிங்க்கை தொடவேண்டாம்’

SCROLL FOR NEXT