படம் | ஆர்சிபி (எக்ஸ்)
ஐபிஎல்

ஆர்சிபி பந்துவீச்சு; முதல் முறையாக அணியின் கேப்டனாக ஜித்தேஷ் சர்மா!

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

DIN

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

ஐபிஎல் தொடரில் லக்னௌவில் நடைபெறும் இன்றையப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் விளையாடுகின்றன.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் ஜித்தேஷ் சர்மா பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். இதனையடுத்து, சன்ரைசர்ஸ் முதலில் பேட் செய்கிறது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் தேவ்தத் படிக்கல்லுக்குப் பதிலாக மயங்க் அகர்வால் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளார். ரஜத் படிதார் இம்பாக்ட் வீரர்களுக்கான தெரிவாக அணியில் உள்ளார்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் டிராவிஸ் ஹெட், அபினவ் மனோகர் மற்றும் ஜெயதேவ் உனத்கட் மீண்டும் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக பஞ்சாப் கிங்ஸை ஜித்தேஷ் சர்மா கேப்டனாக வழிநடத்தியுள்ளார்.

ஜித்தேஷ் சர்மா முதல் முறையாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை கேப்டனாக வழிநடத்துவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லி: முந்திரி திருட்டு வழக்கில் 4 பேர் கைது, 440 கிலோ மீட்பு

கனரா வங்கியில் பட்டதாரிகளுக்கு உதவித்தொகையுடன் தொழில்பழகுநர் பயிற்சி!

அக். 16 - 18ல் வடகிழக்கு பருவமழை தொடங்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம்

ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 5000 ரன்களைக் கடந்து ஸ்மிருதி மந்தனா சாதனை!

ரயில்வேயில் விளையாட்டு வீரர்களுக்கு வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

SCROLL FOR NEXT