படம்: கலீல் அகமது இன்ஸ்டாகிராம். 
ஐபிஎல்

நன்றி சென்னை! தமிழில் பதிவிட்ட சிஎஸ்கே வீரர்!

ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து கலீல் அகமது வெளியிட்ட பதிவு பற்றி...

DIN

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் கலீல் அகமது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து தமிழில் பதிவிட்டுள்ளார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் பெரும் பின்னடைவை சந்தித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தனது கடைசிப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை நேற்று எதிர்கொண்டது.

அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில், 83 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்று, போட்டியில் இருந்து வெளியேறியது.

மொத்தம் 14 போட்டிகளில் 4 இல் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் சென்னை அணி உள்ளது.

இந்த நிலையில், புகைப்படங்களைப் பகிர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ள கலீல் அகமது வெளியிட்ட பதிவில், “அடுத்த முறை சந்திக்கும் வரை சென்னை மற்றும் சூப்பர் ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சீசன் தொடக்கத்தில் சென்னை அணிக்காக அபாரமாக பந்துவீசிய கலீல் அகமது, இரண்டாவது பாதியில் ஃபார்மை நீடிக்க முடியவில்லை.

மொத்தம் 14 போட்டிகளில் 15 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ள கலீல் அகமது, 46.4 ஓவர்கள் வீசி 447 ரன்கள் விட்டுக் கொடுத்துள்ளார்.

படம்: கலீல் அகமது இன்ஸ்டாகிராம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிஎஸ்கேவில் இணைந்த சர்ஃபராஸ் கான், மேத்யூ ஷார்ட், மாட் ஹென்றி!

மெஸ்ஸி நிகழ்ச்சியில் ரசிகா்கள் வன்முறை: மேற்கு வங்க விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜிநாமா!

அன்கேப்டு வீரர்களை ரூ. 28 கோடிக்கு ஏலத்தில் எடுத்து வரலாறு படைத்த சிஎஸ்கே!

கடும் பனிமூட்டம்: சாலை விபத்துகளில் 25 பலி, 59 பேர் படுகாயம்

ரூ. 9 கோடிக்கு கேகேஆர் அணியில் இணைந்த முஸ்தஃபிசூர் ரஹ்மான்!

SCROLL FOR NEXT