திக்வேஷ் ரதி, அஸ்வின், ரிஷப் பந்த்.  படங்கள்: ஏபி, சிஎஸ்கே.
ஐபிஎல்

திக்வேஷ் ரதியை அவமதித்த ரிஷப் பந்த்: அஸ்வின்

திக்வேஷ் ரதி செய்த ரன் அவுட்டுக்கு ரிஷப் பந்த் செயலை அஸ்வின் கடுமையாக விமர்சித்துள்ளார்.

DIN

திக்வேஷ் ரதி செய்த ரன் அவுட்டுக்கு ரிஷப் பந்த் செயலை கடுமையாக விமர்சித்து அஸ்வின் பேசியுள்ளார்.

நேற்றைய போட்டியில் ஆர்சிபி வீரர் ஜிதேஷ் சர்மாவை மன்கட் முறையில் லக்னௌ வீரர் ரன் அவுட் செய்தார். இதனை லக்னௌ அணியின் கேப்டன் ரிஷப் பந்த் வேண்டாம் என நடுவரிடம் முறையிடுவார்.

இது போட்டியையே மாற்றிய தருணமாக இருந்தது. ஜிதேஷ் சர்மா ஆட்ட நாயகன் விருது வென்றதுடன் குவாலிஃபயர் 1-க்கு தகுதிபெற்றதும் குறிப்பிடத்தக்கது.

இது குறித்து தமிழக வீரர் அஸ்வின் தனது யூடியூப் சேனலில் கூறியதாவது:

மோசமான கேப்டன் ரிஷப் பந்த்

திக் வேஷ் ரதி பந்துவீசும்போது ஜிதேஷ் வெளியேறாமல் இருந்தார். பின்னர் அது மூன்றாம் நடுவரிடம் சென்று நாட் அவுட் கொடுக்கப்பட்டது. அது பிரச்னை இல்லை. ஆனால், இதனை ரிஷப் பந்த் வேண்டாம் எனக் கூறியது என்ன மாதிரியான ஸ்போர்ட்மேன்ஷிப்? வளருங்கள் ரிஷப் பந்த்!

ஒரு கேள்வி கேட்கிறேன். திக்வேஷ் ரதி உங்களுடைய மகன் என வைத்துக்கொள்ளுங்கள். யார் இந்த விடியோவை பார்த்தாலும் உங்கள் மகனை கோடிக்கணக்கானவர்கள் முன்பாக ரிஷப் பந்த் விமர்சிக்கிறார்.

ரிஷப் பந்த் கேப்டன்சியில் சிறிது எல்லையை மீறிவிட்டார். பொதுவாக பந்துவீச்சாளர்களை பாதுகாப்பதுதான் கேப்டனின் வேலை. அவரைச் சிறியவனாக்குவதல்ல.

திக்வேஷ் ரதி என்னுடைய உறவினர் இல்லை

ரிஷப் பந்த் இது குறித்து முன்னமே லக்னௌ அணியில் பேசியுள்ளாரா தெரியவில்லை. கோடிக்கணக்கான மக்கள் முன்பாக ஒரு இளைஞரை இழிவுப்படுத்தாதீர்கள்.

நாம் வேறு யாருக்காவது அப்படி செய்வோமா? அது ஒரு அவமதிப்பு.

இந்த நிகழ்வு திவேஷ் ரதியை சிறியவனாக்கியிருக்கும். அவர் மீண்டும் இதனைச் செய்ய மாட்டார். மக்கள் கமெண்ட் செக்சனில் அவரை மீண்டும் செய்யக் கூடாதென்பார்கள்.

அவர் ஏன் செய்யக்கூடாது? திக்வேஷ் ரதி என்னுடைய உறவினர் இல்லை. அவர் யாரென்றே தெரியாது. கோடிக்கணக்கான மக்கள் முன்னிலையில் பந்துவீச்சாளரது முடிவை பின் வாங்கினால் அது அவரை அவமதிப்பதாகவே அர்த்தம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஊழல் வழக்கில் ஷேக் ஹசீனாவுக்கு 10 ஆண்டுகள் சிறை: வங்கதேச நீதிமன்றம் தீா்ப்பு

பிகாா் சட்டப்பேரவைக்கு சக்கர நாற்காலியில் வந்த தேஜஸ்வி யாதவ்!

அரியலூரில் பறிமுதல் வாகனங்கள் பிப்.12-இல் ஏலம்

அச்சுறுத்தும் அழியாத ரசாயனங்கள்

விபத்து எழுப்பும் வினாக்கள்!

SCROLL FOR NEXT