பிரதமர் மோடியுடன் சூர்யவன்ஷி.  படம்: எக்ஸ் / மோடி.
ஐபிஎல்

பிரதமர் மோடியைச் சந்தித்து வாழ்த்து பெற்ற சூர்யவன்ஷி!

14 வயதில் ஐபிஎல் போட்டிகளில் அறிமுகமான சூர்யவன்ஷி மோடியைச் சந்தித்தது குறித்து...

DIN

ஐபிஎல் தொடரில் 14 வயதில் அறிமுகமான சூர்யவன்ஷி மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக இந்த சீசனில் அறிமுகமான வைபவ் சூர்யவன்ஷி முதல் போட்டியிலேயே அதிரடியாக விளையாடி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

பிகார் முதல்வர், கூகுள் சிஇஒ உள்பட பலரும் இந்தச் சிறுவனுக்கு வாழ்த்து மழை பொழிந்தார்கள்.

7 போட்டிகளில் விளையாடிய சூர்யவன்ஷி 252 ரன்களை அடித்தார். இதில் ஒரு சதம், அரைசதம் அடங்கும். குறிப்பாக 206.55 ஸ்டிரைக் ரேட்டில் விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், பாட்னா விமான நிலையத்தில் பிரதமர் மோடியை தனது குடும்பத்துடன் சூர்யவன்ஷி சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார்.

இது குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது:

பாட்னா விமான நிலையத்தில் இளம் கிரிக்கெட்டர் வைபவ் சூர்யான்ஷியையும் அவரது குடும்பத்தையும் சந்தித்தேன். அவரது கிரிக்கெட் திறமைகள் இந்தியா முழுவதும் பாராட்டப்படுகிறது. அவரது வருங்காலம் சிறப்பாக அமைய எனது வாழ்த்துகள் எனக் குறிப்பிட்டுள்ளார்.

விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் பிரதமர் மோடியின் இந்தச் செயலுக்கு பலரும் வாழ்த்துகளைக் கூறி வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாகனங்களை சேதப்படுத்திய இளைஞா் கைது

லாரி - இருசக்கர வாகனம் மோதல் முதியவா் உயிரிழப்பு

மணப்பாறையில் இன்று மின் நிறுத்தம்

உத்தனப்பள்ளி அஞ்சல் அலுவலகம் இடமாற்றம்: பொதுமக்கள் சாலை மறியல்

ரூ. 830.06 கோடியில் 70,427 பேருக்கு நலத் திட்ட உதவிகள் தருமபுரியில் முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்

SCROLL FOR NEXT