கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான சூப்பர் ஓவரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 2 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
13-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய (ஞாயிற்றுக்கிழமை) முதல் ஆட்டத்தில் கொல்கத்தா, ஹைதராபாத் அணிகள் விளையாடி வருகின்றன. இந்த ஆட்டம் சமனில் முடிந்ததால், சூப்பர் ஓவர் முறை கடைப்பிடிக்கப்பட்டுள்ளது. ஆட்டத்தில் 2-வது பேட்டிங் செய்த ஹைதராபாத் சூப்பர் ஓவரில் முதலில் களமிறங்கியது.
ஹைதராபாத் தரப்பில் கேப்டன் டேவிட் வார்னரும், ஜானி பேர்ஸ்டோவும் களமிறங்கினர். கொல்கத்தா தரப்பில் லாக்கி பெர்குசன் பந்துவீசினார். முதல் பந்திலேயே வார்னர் போல்டாகி ஆட்டமிழந்தார். இதையடுத்து, அப்துல் சமத் களமிறங்கினார். அவர் முதல் பந்தில் 2 ரன்கள் எடுக்க, அடுத்த பந்தில் போல்டானார்.
இதன் மூலம் 2 ரன்களுக்கு ஆட்டமிழந்தது ஹைதராபாத். கொல்கத்தா வெற்றிக்கு சூப்பர் ஓவரில் 3 ரன்கள் தேவைப்படுகிறது.