மும்பை இந்தியன்ல், கிங்ஸ் லெவன் பஞ்சாப்புக்கு எதிரான சூப்பர் ஓவரும் சமனில் முடிந்ததால், மீண்டும் சூப்பர் ஓவர் கடைப்பிடிக்கப்படவுள்ளது.
மும்பை இந்தியன்ல், கிங்ஸ் லெவன் பஞ்சாப்புக்கு எதிரான ஆட்டம் சமனில் முடிந்ததால் சூப்பர் ஓவர் முறை கடைப்பிடிக்கப்பட்டது. ஆட்டத்தில் பஞ்சாப் 2-வது பேட்டிங் செய்ததால் சூப்பர் ஓவரில் முதல் பேட்டிங் செய்தது. பூம்ராவின் சிறப்பான ஓவரால் பஞ்சாப் அணி 5 ரன்கள் மட்டுமே எடுத்தது.
6 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் ரோஹித் சர்மா மற்றும் குயின்டன் டி காக் களமிறங்கினர். ஷமியும் சிறப்பாக 6 பந்துகளை யார்க்கராக வீசியதால் முதல் 3 பந்துகளில் 3 ரன்களும், 4-வது பந்தில் ரன் ஏதும் இல்லை, 5-வது பந்தில் 1 ரன் எடுக்க, கடைசி பந்தில் 2 ரன்கள் தேவைப்பட்டன. 2-வது ரன் எடுக்கும்போது டி காக் ரன் அவுட் ஆக சூப்பர் ஓவரும் சமனில் முடிந்தது.
இதனால், மீண்டும் ஒரு சூப்பர் ஓவர் கடைப்பிடிக்கப்படவுள்ளது.