ஐபிஎல்-2020

சூப்பர் ஓவரும் 'டை': மீண்டும் சூப்பர் ஓவர்

DIN


மும்பை இந்தியன்ல், கிங்ஸ் லெவன் பஞ்சாப்புக்கு எதிரான சூப்பர் ஓவரும் சமனில் முடிந்ததால், மீண்டும் சூப்பர் ஓவர் கடைப்பிடிக்கப்படவுள்ளது.

மும்பை இந்தியன்ல், கிங்ஸ் லெவன் பஞ்சாப்புக்கு எதிரான ஆட்டம் சமனில் முடிந்ததால் சூப்பர் ஓவர் முறை கடைப்பிடிக்கப்பட்டது. ஆட்டத்தில் பஞ்சாப் 2-வது பேட்டிங் செய்ததால் சூப்பர் ஓவரில் முதல் பேட்டிங் செய்தது. பூம்ராவின் சிறப்பான ஓவரால் பஞ்சாப் அணி 5 ரன்கள் மட்டுமே எடுத்தது.

6 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் ரோஹித் சர்மா மற்றும் குயின்டன் டி காக் களமிறங்கினர். ஷமியும் சிறப்பாக 6 பந்துகளை யார்க்கராக வீசியதால் முதல் 3 பந்துகளில் 3 ரன்களும், 4-வது பந்தில் ரன் ஏதும் இல்லை, 5-வது பந்தில் 1 ரன் எடுக்க, கடைசி பந்தில் 2 ரன்கள் தேவைப்பட்டன. 2-வது ரன் எடுக்கும்போது டி காக் ரன் அவுட் ஆக சூப்பர் ஓவரும் சமனில் முடிந்தது.

இதனால், மீண்டும் ஒரு சூப்பர் ஓவர் கடைப்பிடிக்கப்படவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பூமியை நெருங்கும் எரிகற்கள்: எச்சரிக்கும் நாசா! என்ன நடக்கும்?

அழகிய தமிழ்மகள்...!

சுற்றுலா சென்ற மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்: 5 பேர் பலி!

கூலி டீசர்- இளையராஜா காப்புரிமை விவகாரம்: ரஜினி கூறியது என்ன?

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

SCROLL FOR NEXT