ஐபிஎல்-2020

ஐபிஎல் கிரிக்கெட்டில் முதல் வெளிநாட்டு வீரர்: வார்னர் புதிய மைல்கல்

DIN


ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் 5,000 ரன்கள் எடுத்த முதல் வெளிநாட்டு வீரர் என்ற சாதனையை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் கேப்டன் டேவிட் வார்னர் படைத்துள்ளார்.

ஐபிஎல்-இன் இன்றைய (ஞாயிற்றுக்கிழமை) முதல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் விளையாடின. இந்த ஆட்டத்தில் 10-வது ரன்னை எடுத்த வார்னர் ஐபிஎல் கிரிக்கெட்டில் 5,000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டினார்.

ஐபிஎல் கிரிக்கெட்டில் 5,000 ரன்களைக் கடந்த 4-வது வீரர் என்ற பெருமையை வார்னர் பெற்றார். அதேசமயம், 5,000 ஐபிஎல் ரன்களைக் கடக்கும் முதல் வெளிநாட்டு வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.

மேலும் குறைந்த இன்னிங்ஸில் 5,000 ஐபிஎல் ரன்களை எடுத்த வீரர் என்ற சாதனையையும் வார்னர் படைத்துள்ளார். அவர் இந்த மைல்கல்லை 135-வது இன்னிங்ஸில் எட்டியுள்ளார்.

5,000 ஐபிஎல் ரன்களைக் கடந்த வீரர்கள்:

விராட் கோலி - 5,759

சுரேஷ் ரெய்னா - 5,368

ரோஹித் சர்மா - 5,149
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT