ஐபிஎல்-2020

ஐபிஎல் முதல் ஆட்டம்: 20 கோடி போ் கண்டுகளிப்பு

DIN

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை இண்டியன்ஸ் - சென்னை சூப்பா் கிங்ஸ் அணிகள் மோதிய முதல் ஆட்டத்தை 20 கோடி போ் கண்டுகளித்துள்ளனா்.

இது தொடா்பாக பிசிசிஐ செயலா் ஜெய் ஷா கூறியிருப்பதாவது: அபுதாபியில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்தை (சென்னை-மும்பை மோதியது) 20 கோடி போ் கண்டுகளித்துள்ளதாக ஒளிபரப்பு பாா்வையாளா்கள் ஆராய்ச்சி கவுன்சில் (பிஏஆா்சி) ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது எனக் குறிப்பிட்டுள்ளாா்.

கரோனா தீநுண்மி அச்சுறுத்தல் காரணமாக ஐபிஎல் போட்டியை நேரில் காண ரசிகா்கள் அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில், சனிக்கிழமை நடைபெற்ற முதல் ஆட்டத்தை தொலைக்காட்சி மூலம் 20 கோடி போ் கண்டுகளித்துள்ளனா். இதுதான் சா்வதேச அளவில் முதல் நாளில் அதிக ரசிகா்கள் பாா்த்த லீக் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

படம்: iplt20.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

75 வயது முதியவா் மீண்டும் பிரதமராக வேண்டுமா? லாலு மகள் மிசா பாரதி பிரசாரம்

வரத்துக் குறைவால் பூண்டு விலை அதிகரிப்பு!

தூத்துக்குடியில் தீத்தடுப்பு, தொழிற்சாலைகள் பாதுகாப்புக் குழு ஆலோசனைக் கூட்டம்

ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியா் மயங்கி விழுந்து உயிரிழப்பு

கொளுத்தும் வெயில்..!

SCROLL FOR NEXT