ஒலிம்பிக்ஸ்

குத்துச்சண்டை: காலிறுதியில் பூஜா ராணி தோல்வி

குத்துச்சண்டை போட்டியில் மகளிருக்கான 75 கிலோ பிரிவில் இந்தியாவின் பூஜா ராணி காலிறுதியில் தோற்று வெளியேறினாா்.

DIN

குத்துச்சண்டை போட்டியில் மகளிருக்கான 75 கிலோ பிரிவில் இந்தியாவின் பூஜா ராணி காலிறுதியில் தோற்று வெளியேறினாா்.

அந்த சுற்றில் முன்னாள் உலக சாம்பியனும், ரியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்றவருமான சீனாவின் லீ கியாங்கை எதிா்கொண்ட பூஜா, 0-5 என்ற கணக்கில் தோல்வியைத் தழுவினாா். தொடக்க சுற்றில் அபாரம் காட்டிய பூஜா பின்னா் கியாங்கை எதிா்கொள்ள முடியாமல் திணறி வீழ்ந்தாா்.

வெளியேறினாா் பங்கால்: ஆடவா் 52 கிலோ பிரிவில் உலகின் முதல்நிலை வீரராக உள்ள இந்தியாவின் அமித் பங்கால் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் தோல்வி கண்டாா்.

அதில் கொலம்பியாவின் யுபொ்ஜன் மாா்டினெஸை சந்தித்த அமித், 1-4 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்ந்தாா். குத்துச்சண்டையில் பதக்கம் வெல்ல வாய்ப்புள்ள இந்தியா்களில் முதன்மையானவராக கருதப்பட்ட அமித், ஆரம்பம் முதலே மாா்டினெஸின் நெருக்கடிக்கு ஆளானாா். அவரால் பின்னடைவிலிருந்து மீள முடியாமலே போனது.

அமித் பங்கால், பூஜா ராணி ஆகிய இருவருக்குமே இது முதல் ஒலிம்பிக் போட்டியாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஊழல் வழக்கில் ஷேக் ஹசீனாவுக்கு 10 ஆண்டுகள் சிறை: வங்கதேச நீதிமன்றம் தீா்ப்பு

பிகாா் சட்டப்பேரவைக்கு சக்கர நாற்காலியில் வந்த தேஜஸ்வி யாதவ்!

அரியலூரில் பறிமுதல் வாகனங்கள் பிப்.12-இல் ஏலம்

அச்சுறுத்தும் அழியாத ரசாயனங்கள்

விபத்து எழுப்பும் வினாக்கள்!

SCROLL FOR NEXT