டோக்கியோ ஒலிம்பிக்ஸில் ஆடவர் மல்யுத்தம் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்தியாவின் தீபக் புனியா தோல்வியடைந்துள்ளார்.
22 வயது தீபக் புனியா 86 கிலோ பிரிவில் போட்டியிட்டு அரையிறுதிச்சுற்றில் வீழ்ந்தார். அடுத்ததாக வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் சான் மரினோவைச் சேர்ந்த அமின் மைல்ஸ் நசீமை எதிர்கொண்டார்.
ஆரம்பத்தில் தீபக் புனியா முன்னிலையில் இருந்தார். எனினும் கடைசிக் கட்டத்தில் நசீம் சிறப்பாக விளையாடி 4-2 என்கிற புள்ளிக்கணக்கில் வெற்றி கண்டார்.