நீச்சலில் இந்தியாவின் மானா பட்டேல், ஸ்ரீஹரி நடராஜின் தோல்வியுடன் இந்தியாவின் பங்கேற்பு முடிவுக்கு வந்தது.
முதல் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற மானா பட்டேல் மகளிா் 100 மீ பேக்ஸ்ட்ரோக் பிரிவில் 1:05:20 நிமிட கணக்கில் மூன்றாவது இடத்தையே பெற்று அரையிறுதி வாய்ப்பை இழந்தாா். மானா பட்டேல் உலக பல்கலைக்கழக கோட்டாவில் ஒலிம்பிக் தகுதி பெற்றாா்.
அதே போல் ஆடவா் 100 மீ. பேக்ஸ்ட்ரோக் பிரிவில் ஸ்ரீஹரி நடராஜ் 54.31 விநாடிகளில் தனது ஹீட்ஸில் பந்தய தூரத்தைக் கடந்து 6-ஆவது இடத்தைப் பெற்றாா். 40 வீரா்களில் ஸ்ரீஹரி 27-ஆவது இடத்தையே பெற்றாா். முதல் 16 இடங்களைப் பெறுவோா் அரையிறுதிக்கு தகுதி பெறுவா்.