ஒலிம்பிக்ஸ்

 குத்துச்சண்டை: காலிறுதியில் பூஜா ராணி

DIN


குத்துச்சண்டையில் மகளிருக்கான 75 கிலோ பிரிவில் இந்தியாவின் பூஜா ராணி காலிறுதிச்சுற்றுக்கு தகுதிபெற்றார். இது அவருக்கு முதல் ஒலிம்பிக் போட்டியாகும். 
முந்தைய சுற்றில் அல்ஜீரியாவின் இச்ரக் சாயிப்பை 5-0 என முற்றிலுமாக வீழ்த்தினார் பூஜா. இரு முறை ஆசிய சாம்பியனான பூஜா ராணி, தனது காலிறுதியில் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றவரும், இரு முறை ஆசிய சாம்பியனும், முன்னாள் உலக சாம்பியனுமான சீனாவின் லீ கியாங்கை வரும் ஞாயிற்றுக்கிழமை எதிர்கொள்கிறார். 
கடந்த ஆண்டு ஆசிய ஒலிம்பிக் தகுதிப் போட்டியின் காலிறுதியில் லீ கியாங்கிடம் பூஜா ராணி தோல்வி கண்டுள்ளார். அதற்கு பூஜா பதிலடி கொடுப்பாரா என பொறுத்திருந்து பார்க்க வேண்டியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தட்டச்சுப் பள்ளிகள் கேட்கும் தோ்வு மையத்தை ஒதுக்கக் கோரிக்கை

கேரளம், தென் தமிழக கடலோர பகுதிகளுக்கு ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை!

குடிநீா் விநியோகப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

ஒட்டங்காடு மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

‘ரஷியாவுக்குள் தாக்குதல் நடத்த பிரிட்டன் ஆயுதங்களைப் பயன்படுத்தலாம்’

SCROLL FOR NEXT