முகப்பு
ஒலிம்பிக்ஸ்

ஒலிம்பிக்ஸ் குத்துச்சண்டை: காலிறுதிக்கு முன்னேறிய இந்தியாவின் சதீஷ் குமார் (விடியோ)

இந்தியாவின் 32 வயது சதீஷ் குமார், காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்... 

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:47 AM
பகிர்:

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் ஆடவர் குத்துச்சண்டை ஹெவிவெயிட் பிரிவில் (+ 91 கிலோ) இந்தியாவின் 32 வயது சதீஷ் குமார், காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். 

இன்று நடைபெற்ற போட்டியில் ஜமைக்காவின் ரிகார்டோ பிரெளனை 4-1 என்கிற புள்ளிக்கணக்கில் வீழ்த்தினார். காலிறுதியில் உஸ்பெகிஸ்தானின் பகோடிர் ஜலோலோவை எதிர்கொள்கிறார் சதீஷ் குமார். 

பகோடிர், நடப்பு உலக சாம்பியன் என்பதால் அரையிறுதிக்கு சதீஷ் குமார் தகுதி பெறுவது சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.