டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் அரையிறுதிச்சுற்றில் இந்தியாவின் பி.வி. சிந்து தோல்வியடைந்துள்ளார்.
பாட்மிண்டன் அரையிறுதியில் சீன தைபேவைச் சேர்ந்த உலகின் நெ.1 வீராங்கனை தாய் சு யிங்கை எதிர்கொண்டார் சிந்து. இதற்கு முன்பு இருவருக்குமிடையே நடைபெற்ற ஆட்டங்களில் 13-5 என முன்னிலை பெற்றுள்ளார் தாய். கடைசி மூன்று ஆட்டங்களிலும் அவருக்கே வெற்றி கிடைத்துள்ளது.
இதையும் படிக்க | ஒலிம்பிக்ஸ் குத்துச்சண்டை: இந்தியாவின் பூஜா ராணி காலிறுதியில் தோல்வி
முதல் கேமில் ஆரம்பத்தில் 11-8 என சிந்து முன்னிலை பெற்றிருந்தாலும் பிறகு சாதுர்யமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 21-18 என முதல் கேமைக் கைப்பற்றினார் தாய். அடுத்த கேமில் தாய் ஆதிக்கம் செலுத்தினார். இதனால் 2-வது கேமை 21-12 என வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார் தாய்.
இதையடுத்து நாளை நடைபெறும் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் சீன வீராங்கனை ஹி பிங் ஜாவ்வுடன் சிந்து மோதவுள்ளார்.