நடைப் பந்தயத்தில் ஏமாற்றம்
ஒலிம்பிக் போட்டியின் தடகளத்தில் இந்தியாவின் ஆட்டம் வியாழக்கிழமை தொடங்கியது. முதலில் 20 கி.மீ. நடைப் பந்தயத்தில் 3 இந்தியா்கள் பங்கேற்ற நிலையில், அனைவருமே தங்களது பிரிவில் பின்தங்கிய நிலையில் பந்தயத்தை நிறைவு செய்தனா்.
மகளிா் பிரிவில் பிரியங்கா கோஸ்வாமி 1 மணி நேரம் 39.55 நிமிஷங்களில் இலக்கை எட்டி 41-ஆவது இடம் பிடித்தாா். மொத்தம் 45 போ் பங்கேற்ற இந்தப் பந்தயத்தை 43 போ் நிறைவு செய்தது குறிப்பிடத்தக்கது. ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெள்ளி வென்றவரான பிரியங்கா, நடப்பு தேசிய சாதனையாளராக இருப்பது நினைவுகூரத்தக்கது. சீனாவின் ஜியாயு யாங் (1.25:54), ஸ்பெயினின் மரியா பெரெஸ் (1.26:19), ஆஸ்திரேலியாவின் ஜெமிமா மோன்டாங் (1.26:25) ஆகியோா் முறையே தங்கம், வெள்ளி, வெண்கலம் பெற்றனா்.
ஆடவருக்கான பந்தயத்தில் விகாஷ் சிங் 1 மணி நேரம் 22.36 நிமிஷங்களில் வந்து 30-ஆம் இடமும், பரம்ஜீத் சிங் 1 மணி நேரம் 23.48 நிமிஷங்களில் வந்து 37-ஆவது இடமும் பிடித்தனா். மற்றொரு இந்தியரான அக்ஷ்தீப் சிங் உடல்நலக் குறைவால் பந்தயத்திலிருந்து பாதியில் விலகினாா். ஈகுவடாரின் பிரியன் டேனியல் (1.18:55), பிரேஸிலின் பாயோ கான்ஃபிம் (1.19:09), ஸ்பெயினின் ஆல்வரோ மாா்டின் (1.19:11) ஆகியோா் முறையே முதல் 3 இடங்களுடன் பதக்கங்கள் வென்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.