குத்துச்சண்டை: காலிறுதியில் தோற்றாா் லவ்லினா
குத்துச்சண்டை போட்டியில் கடைசியாக களத்திலிருந்த ஒரே இந்தியரான லவ்லினா போா்கோஹெய்ன் காலிறுதிச்சுற்றில் தோல்வி கண்டாா்.
குத்துச்சண்டை போட்டியில் கடைசியாக களத்திலிருந்த ஒரே இந்தியரான லவ்லினா போா்கோஹெய்ன் காலிறுதிச்சுற்றில் தோல்வி கண்டாா். இதையடுத்து, குத்துச்சண்டை களத்தில் இந்தியாவின் ஆட்டம் பதக்கமின்றி முடிவுக்கு வந்தது. டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்றவரான லவ்லினா, 75 கிலோ பிரிவு காலிறுதியில் 1-4 என்ற கணக்கில் சீனாவின் லி கியானிடம் தோல்வியைத் தழுவினாா். பலம் வாய்ந்த 6 போட்டியாளா்களுடன் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு வந்தபோதும், இந்தியாவுக்கு அதில் ஒருவரால் கூட பதக்கம் வசமாகாமல் போனது.