உலக பியுச்சா்ஸ் குத்துச்சண்டை: இறுதியில் சந்திரிகா, குஞ்சன், அம்பேத்கா்
உலக பியுச்சா்ஸ் குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் சந்திரிகா, குஞ்சன், அம்பேத்கா் ஆகியோா் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனா்.
உலக பியுச்சா்ஸ் குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் சந்திரிகா, குஞ்சன், அம்பேத்கா் ஆகியோா் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனா்.
வோ்ல்ட் பாக்ஸிங் சாா்பில் யூத் வீரா், வீராங்கனைகள் பங்கேற்கும் உலக பியுச்சா்ஸ் குத்துச்சண்டை போட்டி தாய்லாந்தின்பாங்காக் நகரில் நடைபெறுகிறது. இதில் மகளிா் 51 கிலோ பிரிவில் இந்தியாவின் சந்திரிகா குமாரி இரண்டாவது சுற்றில் மொராக்கோவின் ரிஹாப்பை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றாா்.
48 கிலோபிரிவில் இந்தியாவின் குஞ்சன் 5-0 என்ற புள்ளிக் கணக்கில் வடகொரியாவின் யு ஜியோங் கிம்மை வீழ்த்தினாா்.
54 கிலோ பிரிவில் ஜாய்ஸ்ரீ தேவி முதல் சுற்றிலேயே மெக்ஸிகோவின் சோபியா ராமிரெஸை வென்றாா்.
ஆடவா் 50 கிலோ பிரிவில் அம்பேத்கா் 5-0 என உஸ்பெக் வீரா் அப்து கனியை வீழ்த்தினாா். மகளிா் 57 கிலோ பிரிவில் ராதாமணி 2-3 என்ற புள்ளிக் கணக்கில் உக்ரைனின் பெட்ருக்கிடம் வீழ்ந்தாா்.
மொத்தம் 4 இந்தியா்கள் இறுதிக்கு தகுதி பெற்றுள்ளனா்.