ஸ்பெஷல்

சிஎஸ்கே-வுக்கு ராசியாக உள்ள கடைசி ஓவர்: பரபரப்பான ஆட்டத்தின் ஹைலைட்ஸ்!

எழில்

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 20-ஆவது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தியது. இதுவரை 5 ஆட்டங்களில் ஆடியுள்ள சென்னைக்கு இது 4-ஆவது வெற்றியாகும். அதே எண்ணிக்கையிலான ஆட்டங்களை எதிர்கொண்ட ஹைதராபாதுக்கு இது 2-ஆவது தோல்வி.

ஹைதராபாதில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த சென்னை 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்தது. அடுத்து 183 ரன்களை இலக்காகக் கொண்டு ஆடிய ஹைதராபாத், 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்து வீழ்ந்தது. ஆட்டத்தில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய ராயுடு ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார். 

இந்த வருட ஐபிஎல் போட்டியில் இதுவரை சிஎஸ்கே விளையாடிய 5 ஆட்டங்களில் 4 ஆட்டங்களின் முடிவுகள் கடைசி ஓவர்களில் தீர்மானிக்கப்பட்டுள்ளன. அதில் ஒரு ஆட்டத்தில் மட்டுமே சிஎஸ்கேவால் வெற்றியடைய முடியாமல் போனது. எனவே 3 முறை கடைசி ஓவர்களில் சிஎஸ்கே வென்று ரசிகர்களுக்குப் பரபரப்பான தருணங்களை அளித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வறட்சியில் இருந்து பயிா்களை காக்கும் வழிகள்: வேளாண் துறை

பெத்திக்குட்டையில் தஞ்சடைந்த யானை: வனத்துக்குள் விரட்ட வனத் துறை முயற்சி

மேட்டுப்பாளையத்தில் மான் இறைச்சி எடுத்துச்செல்ல முயன்ற 6 போ் கைது

நகைத் திருடிய 2 பெண்கள் மீது வழக்குப் பதிவு

செஸ் வீரா் குகேஷுக்கு கனரா வங்கி பாராட்டு

SCROLL FOR NEXT