முகப்பு
செய்திகள்

இந்திய அணியின் தேர்வுக்குழுத் தலைவராக எம்எஸ்கே பிரசாத் தேர்வு!

இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழுத் தலைவராக முன்னாள் வீரர் எம்எஸ்கே பிரசாத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Updated On : 21 செப்டம்பர், 2016 at 2:16 PM
பகிர்:
Updated On : 25 ஜனவரி, 2024 at 10:07 AM

இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழுத் தலைவராக முன்னாள் வீரர் எம்எஸ்கே பிரசாத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பிசிசிஐ-யின் 87-வது ஆண்டுப் பொதுக் குழு மும்பையில் இன்று நடைபெற்றது. அதில், இந்திய கிரிக்கெட்டின் தேர்வுக்குழுத் தலைவராக எம்எஸ்கே பிரசாத் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இவர் இந்திய அணியில் 1998 முதல் 2000 வரை விக்கெட் கீப்பராக விளையாடியவர்.

சந்தீப் பாட்டீல் தலைமையிலான தேர்வுக் குழுவினரின் பதவிக்காலம் சமீபத்தில் முடிவடைந்தது. இதையடுத்து பிரசாத் தலைமையில் புதிய தேர்வுக்குழு தேர்வு செய்யப்பட்டுள்ளது. தேர்வுக்குழுவில் தேவங் காந்தி, ககன் கோடா, சரண்தீப் சிங், ஜதின் ஆகியோரும் இடம்பெற்றுள்ளார்கள். 

Advertisement

இதற்கு முன்பு தேர்வுக்குழு தலைவராக இருந்த சந்தீப் பாட்டீலின் பதவிக்காலம் சமீபத்தில் முடிவடைந்தது. அவர் 2012-ம் ஆண்டு அப்பதவிக்குத் தேர்வானார். இதனையடுத்து பிரசாத் அப்பொறுப்புக்குத் தேர்வாகியுள்ளார். முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வெங்கடேஷ் பிரசாத், இந்திய ஜூனியர் அணியின் தேர்வுக்குழுத் தலைவராகத் தேர்வாகியுள்ளார். 

41 வயதான எம்எஸ்கே பிரசாத், 6 டெஸ்டுகள், 17 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.