பிசிசிஐ செயலராக ஷிர்கே போட்டியின்றித் தேர்வு!
பிசிசிஐ-யின் தற்போதைய செயலர் அஜய் ஷிர்கே, மீண்டும் அந்தப் பதவிக்கு போட்டியின்றி தேர்வாகியுள்ளார்.
Updated On : 25 ஜனவரி, 2024 at 10:07 AM
பிசிசிஐ-யின் தற்போதைய செயலர் அஜய் ஷிர்கே, மீண்டும் அந்தப் பதவிக்கு போட்டியின்றி தேர்வாகியுள்ளார்.
பிசிசிஐ-யின் 87-வது ஆண்டுப் பொதுக் குழு மும்பையில் இன்று நடைபெற்றது. அப்போது, செயலர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. அந்தப் பதவிக்கான தேர்தலுக்கு அஜய் ஷிர்கே மட்டுமே விண்ணப்பித்ததால் அவர் போட்டியின்றித் தேர்வானார்.
ஐசிசி தலைவர் பதவிக்காக பிசிசிஐ தலைவர் பதவியிலிருந்து சஷாங்க் மனோகர் விலகியதை அடுத்து, பிசிசிஐ செயலராக இருந்த அனுராக் தாக்குர் அதன் தலைவரானார். இதையடுத்து அஜய் ஷிர்கே ஜூலையில் பிசிசிஐ செயலராக நியமிக்கப்பட்டார். தற்போது மீண்டும் பிசிசிஐ செயலராக அவர் தேர்வாகியுள்ளார்.
Advertisement