பான் பசிபிக் ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்ஸா-செக்.குடியரசின் பர்போரா ஸ்டிரைகோவா ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் சனிக்கிழமை நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் சானியா-பர்போரா ஜோடி 6-1, 6-1 என்ற நேர் செட்களில் சீனாவின் சென் லியாங்-ஜாவ்ஸýயான் யங் ஜோடியைத் தோற்கடித்தது.
சானியா-பர்போரா ஜோடி வென்ற 2-ஆவது சாம்பியன் பட்டம் இது. இவர்கள் இருவரும் இணைந்து இதுவரை 3 தொடர்களில் விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.