சிங்கப்பூர் ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
சிங்கப்பூரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் சிந்து தனது இரண்டாவது சுற்றில் கடும் போராட்டத்துக்குப் பிறகு 19-21, 21-17, 21-8 என்ற செட் கணக்கில் இந்தோனேசியாவின் ஃபிட்ரியானியைத் தோற்கடித்தார்.
சமீபத்தில் வெளியிடப்பட்ட சர்வதேச மகளிர் பாட்மிண்டன் தரவரிசையில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து மூன்று இடங்கள் முன்னேறி 2-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். இது, அவருடைய அதிபட்ச தரவரிசையாகும். சர்வதேச தரவரிசையில் முதல் 5 இடங்களுக்குள் முன்னேறிய 2-ஆவது இந்திய வீராங்கனையான சிந்து 75,759 புள்ளிகளுடன் 2-ஆவது இடத்தில்
இருக்கிறார். கடந்த வாரம் நடைபெற்ற இந்திய ஓபன் சூப்பர் சீரிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம் தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளார் சிந்து.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.