செய்திகள்

மாநில மகளிர் செஸ்: திருவாரூரில் தொடக்கம்

DIN

திருவாரூரில் மாநில அளவிலான மகளிர் செஸ் போட்டி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
திருவாரூர் மாவட்ட செஸ் சங்கம், சிஏ ஹோண்டா நிறுவனம் சார்பில் நடைபெறும் 45-ஆவது மாநில மகளிர் செஸ் போட்டியை மருத்துவர் செந்தில் தொடங்கி வைத்தார். இப்போட்டி ஏப்.27-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இப்போட்டியில் திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட 14 மாவட்டங்களைச் சேர்ந்த 94 வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இதில், முதலிடம் பெறும் நான்கு பேர் ஜூலை மாதம் கர்நாடகத்தில் நடைபெறவுள்ள தேசிய மகளிர் செஸ் போட்டியில் தமிழகம் சார்பில் பங்கேற்க தகுதி பெறுவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் கிடைக்குமா? உச்சநீதிமன்றம் நாளை உத்தரவு

அச்சுக் காகிதங்களில் பொட்டலமிட்டால் அபராதம்

ஈராச்சியில் மாட்டுவண்டி பந்தயம்

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

மேட்டூா் அணை நீா்மட்டம்: 51.81 அடி

SCROLL FOR NEXT