முகப்பு
செய்திகள்

ஜடேஜாவுக்குத் தடை: கடுமையான தண்டனை என ஹர்ஷா போக்ளே கருத்து!

விதிமுறையை மீறியதற்காக இந்திய அணியின் ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜாவுக்கு பல்லகெலேவில் நடைபெறவுள்ள...

Updated On : 7 ஆகஸ்ட், 2017 at 12:49 PM
பகிர்:

இலங்கைக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 53 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது இந்தியா. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் 2-0 என முன்னிலை பெற்றுள்ள இந்திய அணி, தொடரையும் கைப்பற்றியுள்ளது. இலங்கை தலைநகர் கொழும்பில் நடைபெற்ற இந்தப் போட்டியில் இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 158 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 622 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.  முதல் இன்னிங்ஸில் 183 ரன்களுக்கு சுருண்ட நிலையில், "பாலோ-ஆன்' பெற்று 2-ஆவது இன்னிங்ஸை ஆடிய இலங்கை அணி 116.5 ஓவர்களில் 386 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 

இந்நிலையில், ஐசிசி விதிமுறையை மீறியதற்காக இந்திய அணியின் ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜாவுக்கு பல்லகெலேவில் நடைபெறவுள்ள 3-ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

இலங்கை 2-ஆவது இன்னிங்ஸில் பேட் செய்தபோது 58-ஆவது ஓவரை வீசினார் ஜடேஜா. அப்போது இலங்கை வீரர் கருணாரத்னே கிரீஸுக்குள் நின்ற நிலையில், பந்தை ஸ்டெம்பை நோக்கி எறிந்தார். அதை அபாயகரமானது எனக்கூறி ஜடேஜாவை எச்சரித்தார் நடுவர். கடந்த 24 மாதங்களில் 6-ஆவது முறையாக ஐசிசி விதிமுறையை மீறியிருக்கிறார் ஜடேஜா. இதையடுத்து அவர், 3-ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாட தடை விதித்துள்ள ஐசிசி, அவருடைய போட்டி ஊதியத்தில் 50 சதவீதத்தை அபராதமாக விதித்துள்ளது.

Advertisement

ஐசிசியின் இந்தத் தண்டனை பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது. கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஹா போக்ளே தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது: ஜடேஜாவின் தடையைக் கண்டு குழப்பம் அடைந்துள்ளேன். ஆபத்தான செயலாக எனக்குத் தெரியவில்லை. கடினமான தண்டனையாக உள்ளது. குற்றம் என்று சொல்வதுபோல இல்லை. ஒருவேளை அருகிலிருந்து பார்க்கும்போது அது வேறுவிதமாகத் தெரிந்திருக்கலாம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.