செய்திகள்

பிரேம்ஜித் லால் நினைவு டென்னிஸ்: இறுதிச்சுற்றில் ராம்குமார் ராமநாதன்

DIN

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் நடைபெற்றுவரும் பிரேம்ஜித் லால் நினைவு டென்னிஸ் போட்டி இறுதிச்சுற்றில், போட்டித் தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும் ராம்குமார் ராமநாதன், ஸ்ரீராம் பாலாஜியை எதிர்கொள்ள உள்ளார்.
வெள்ளிக்கிழமை நடைபெற்ற அரையிறுதியில், 6-3, 6-3 என்ற நேர் செட் கணக்கில், பிரசாந்த் விஜய் சுந்தரை வீழ்த்தினார் ராம்குமார்.
மற்றொரு அரையிறுதியில், 6-4, 7-5 என்ற செட் கணக்கில், சாகேத் மைனேனியை வீழ்த்தினார் ஸ்ரீராம் பாலாஜி.
போட்டித் தரவரிசையில் இரண்டாவது இடத்தில் இருக்கும் ஸ்ரீராம் பாலாஜியும், ராம்குமாரும் சனிக்கிழமை இறுதிப் போட்டியில் மோத உள்ளனர்.
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இந்திய முன்னாள் டென்னிஸ் வீரர் பிரேம்ஜித் லாலின் நினைவாக இந்தப் போட்டி நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயங்கரவாதிகளை காக்கும் திரிணமூல் அரசு: பாஜக குற்றச்சாட்டு

ராணுவ மையத்தில் பயின்ற 18 மாணவா்கள் ஜேஇஇ தோ்வில் சாதனை

‘இந்தியா’ கூட்டணி 3 இலக்கத்தை எட்டாது: பிரதமா் மோடி

வள்ளலாா் சா்வதேச மையம் கட்ட எதிா்ப்பு: நாம் தமிழா் கட்சி ஆா்ப்பாட்டம் அறிவிப்பு

கீழ்பவானி கால்வாய் பாசனத்துக்கு நீா் திறக்க வேண்டும்: சீமான்

SCROLL FOR NEXT