முகப்பு
செய்திகள்

ஐஎஸ்எல்: புணே பயிற்சியாளருக்கு தடை

இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்தாட்டத்தில், போட்டி அதிகாரிகளை தவறாக விமர்சித்ததாக எஃப்சி புணே அணி பயிற்சியாளர் ரேங்கோ போபோவிச்சுக்கு 4 ஆட்டங்களில் தடையும், ரூ.5 லட்சம் அபராதமும்

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:27 PM
பகிர்:

இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்தாட்டத்தில், போட்டி அதிகாரிகளை தவறாக விமர்சித்ததாக எஃப்சி புணே அணி பயிற்சியாளர் ரேங்கோ போபோவிச்சுக்கு 4 ஆட்டங்களில் தடையும், ரூ.5 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
கோவாவில் கடந்த 23-ஆம் தேதி எஃப்சி புணே சிட்டி-எஃப்சி கோவா அணிகளிடையேயான ஆட்டத்தின்போது இச்சம்பவம் நிகழ்ந்தது. இதையடுத்து, அகில இந்திய கால்பந்து சம்மேளன ஒழுங்கு விதிகளின் கீழ், ரேங்கோவுக்கு 4 ஆட்டங்களில் (டிச.23 முதல்) பங்கேற்க தடை விதிக்கப்பட்டது. 
அத்துடன் ரூ.5 லட்சம் அபராதம் 10 நாள்களில் செலுத்தப்படாவிட்டால், அதை செலுத்தும் நாள் வரையில் அவருக்கு தடை விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →