இந்தியாவுக்கு எதிரான மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியின் 25 வயது லிஸலே லீ அதிரடியாக விளையாடி 92 ரன்கள் எடுத்தார்.
இந்தியா- தென் ஆப்பிரிக்க அணிகள் இடையேயான போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இரண்டாவது ஓவரிலேயே லெளராவின் விக்கெட்டை வீழ்த்தினார் ஷிகா பாண்டே. இதன்பிறகு இந்திய அணியின் பந்துவீச்சை லிஸலே லீ பதம் பார்த்தார்.
ஒன்பது மற்றும் பத்தாவது ஓவர்களில் 31 ரன்கள் கிடைத்தது. 44 பந்துகளில் அரை சதம் எடுத்தார் லீ. அதன்பிறகும் அவருடைய அதிரடி ஆட்டம் தொடர்ந்தது. கடைசியில் 7 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகளுடன் 92 ரன்களில் ஆட்டமிழந்தார். தென் ஆப்பிரிக்க அணி 47-வது ஓவரில் 250 ரன்களை எட்டியது.