முகப்பு
செய்திகள்

புரட்சித் தலைவி அம்மா அளித்த ஊக்கம்: ‘தங்க மகன்’ லட்சுமணனுக்கு ஓபிஎஸ் பாராட்டு!

அம்மா அவர்களின் ஆட்சியிலேதான் விளையாட்டுத்துறையில் தனிக்கவனம் செலுத்தப்பட்டு...

Updated On : 29 ஜனவரி, 2024 at 4:23 PM
பகிர்:

22- ஆவது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் ஒடிஸா மாநிலம் புவனேசுவரத்தில் உள்ள கலிங்கா விளையாட்டரங்கத்தில் நடைபெற்றது. ஆடவருக்கான 5000 மீட்டர் மற்றும் 10,000 மீ. ஓட்டங்களில் தமிழக வீரர் லஷ்மணன் தங்கப் பதக்கங்களை வென்றார்.

லட்சுமணனுக்குப் பாராட்டு தெரிவித்து முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

தமிழக வீரர் லட்சுமணன் தமிழ்நாட்டுக்கு மட்டுமல்லாமல் இந்தியத் திருநாட்டுக்கே மிகப்பெரிய கெளரவத்தைத் தேடித்தந்துள்ளார்.

அம்மா அவர்களின் ஆட்சியிலேதான் விளையாட்டுத்துறையில் தனிக்கவனம் செலுத்தப்பட்டு, விளையாட்டு வீரர்கள் உற்சாகப்படுத்தப்பட்டார்கள்.

விளையாட்டுப் போட்டிகளில் சாதனை படைத்த தமிழக வீரர்களுக்கு மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்கள் தனது பொற்கரங்களால் பரிசளித்துப் பாராட்டி அவர்கள் மேலும் தங்கள் திறமையை வளர்த்துக்கொள்வதற்காக நிதி உதவியும் அளித்து வாழ்த்தினார்கள்.

இன்று தமிழ்நாட்டுக்குப் பெருமைத் தேடித் தந்த லட்சுமணன் அவர்கள் இதேபோல் பல வெற்றிகள் பெற்று தமிழ்நாட்டுக்கு மேலும் பெருமைகள் சேர்க்க வேண்டும் என்று மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் புனிதப்பாதையில் நின்று எனது நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.