செய்திகள்

6000 ரன்கள்: இந்திய வீராங்கனை மிதாலி ராஜ் உலக சாதனை!

எழில்

மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் 6,000 ரன்களைக் கடந்த முதல் வீராங்கனை என்கிற பெருமையை இந்திய அணியின் கேப்டன் மிதாலி ராஜ் பெற்ருள்ளார்.

மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் 191 போட்டிகளில் 5992 ரன்கள் எடுத்து இங்கிலாந்தின் சார்லோட் எட்வர்ட்ஸ் அதிக ரன்கள் எடுத்த வீராங்கனைகள் பட்டியலில் முதலிடத்தில் இருந்தார். இன்றைய ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டிக்கு முன்பு மிதாலி ராஜ் 181 போட்டிகளில் 5959 ரன்களுடன் இரண்டாம் இடத்தில் இருந்தார். 

இந்நிலையில் இன்றைய போட்டியில் 34 ரன்கள் எடுத்தபோது ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த வீராங்கனை என்கிற பெருமையைப் பெற்றார் மிதாலி ராஜ். 

மேலும், 41 ரன்களை எடுத்தபோது ஒருநாள் போட்டியில் 6,000 ரன்கள் எடுத்த முதல் வீராங்கனை என்கிற உலக சாதனையைப் படைத்தார் மிதாலி ராஜ். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரகாசபுரத்தில் தண்ணீா் பந்தல் திறப்பு

வடிகாலை ஆக்கிரமித்து கட்டுமானப் பணிகள்: நகா்மன்ற உறுப்பினா் புகாா்

திருச்செங்காட்டங்குடிகோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

குருபெயா்ச்சியை முன்னிட்டு சிறப்பு யாகம்

நாசரேத்தில் மாணவா்களுக்கு கோடைகால கால்பந்து பயிற்சி தொடக்கம்

SCROLL FOR NEXT