முகப்பு
செய்திகள்

6000 ரன்கள்: இந்திய வீராங்கனை மிதாலி ராஜ் உலக சாதனை!

மகளிர் ஒருநாள் போட்டியில், 6,000 ரன்களைக் கடந்த முதல் வீராங்கனை என்கிற பெருமையை...

Updated On : 29 ஜனவரி, 2024 at 4:25 PM
பகிர்:

மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் 6,000 ரன்களைக் கடந்த முதல் வீராங்கனை என்கிற பெருமையை இந்திய அணியின் கேப்டன் மிதாலி ராஜ் பெற்ருள்ளார்.

மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் 191 போட்டிகளில் 5992 ரன்கள் எடுத்து இங்கிலாந்தின் சார்லோட் எட்வர்ட்ஸ் அதிக ரன்கள் எடுத்த வீராங்கனைகள் பட்டியலில் முதலிடத்தில் இருந்தார். இன்றைய ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டிக்கு முன்பு மிதாலி ராஜ் 181 போட்டிகளில் 5959 ரன்களுடன் இரண்டாம் இடத்தில் இருந்தார். 

இந்நிலையில் இன்றைய போட்டியில் 34 ரன்கள் எடுத்தபோது ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த வீராங்கனை என்கிற பெருமையைப் பெற்றார் மிதாலி ராஜ். 

மேலும், 41 ரன்களை எடுத்தபோது ஒருநாள் போட்டியில் 6,000 ரன்கள் எடுத்த முதல் வீராங்கனை என்கிற உலக சாதனையைப் படைத்தார் மிதாலி ராஜ். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.