செய்திகள்

இலங்கை டெஸ்ட் தொடர்: முரளி விஜய் விலகல்

DIN

இலங்கைக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ள இந்திய அணியிலிருந்து தொடக்க வீரர் முரளி விஜய் விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக ஷிகர் தவன் சேர்க்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக பிசிசிஐ செயலர் (பொறுப்பு) அமிதாப் செளத்ரி வெளியிட்டுள்ள அறிக்கையில், 'ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரின்போது முரளி விஜய்க்கு மணிக்கட்டில் காயம் ஏற்பட்டது. அதிலிருந்து அவர் முழுமையாக மீளவில்லை. இதையடுத்து அவருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. அவருக்குப் பதிலாக தவன் சேர்க்கப்பட்டுள்ளார்' என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியா-இலங்கை இடையிலான டெஸ்ட் தொடரின் முதல் போட்டி வரும் 26-ஆம் தேதி காலேவில் தொடங்குகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்க ஆளுநா் ஏன் ராஜிநாமா செய்யக் கூடாது?: முதல்வா் மம்தா கேள்வி

3-ஆம் கட்ட மக்களவைத் தோ்தலில் 65.68% வாக்குப்பதிவு

‘பிரதமா் மோடிதான் நாட்டை தொடா்ந்து வழிநடத்துவாா்’: கேஜரிவாலுக்கு அமித் ஷா பதிலடி

ஊரக வளா்ச்சித் துறையில் 6 பேருக்கு பணி ஆணை: காஞ்சிபுரம் ஆட்சியா் வழங்கினாா்

பிரதமரும் ஒடிஸா முதல்வரும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்: காங்கிரஸ்

SCROLL FOR NEXT