ஜெர்மனியின் ஹம்பர்க் நகரில் நடைபெறவுள்ள உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க இந்தியாவின் கெளரவ் பிதுரி தகுதி பெற்றுள்ளார்.
கிர்கிஸ்தான் தலைநகர் தாஷ்கண்டில் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியின்போது உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதிபெறும் வாய்ப்பை கெளரவ் பிதுரி இழந்தார்.
இந்த நிலையில் ஆடவர் 56 கிலோ எடைப் பிரிவில் பூடான் சார்பில் யாரும் அனுப்பப்படவில்லை என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அந்த இடத்துக்கு கெளரவ் பிதுரி தகுதி பெற்றுள்ளார்.