செய்திகள்

அமெரிக்க ஓபன்: அரையிறுதியில் காஷ்யப், பிரணாய்

DIN

அமெரிக்க ஓபன் கிராண்ட்ப்ரீ கோல்டு பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் காஷ்யப், எச்.எஸ்.பிரணாய் ஆகியோர் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.
அமெரிக்காவின் அனாஹெய்ம் நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் சனிக்கிழமை நடைபெற்ற காலிறுதியில் காஷ்யப் 21-13, 21-16 என்ற நேர் செட்களில் சகநாட்டவரான சமீர் வர்மாவைத் தோற்கடித்தார்.
கடந்த 7 மாதங்களில் முதல்முறையாக அரையிறுதிக்கு முன்னேறியிருக்கும் காஷ்யப், அடுத்ததாக தென் கொரியாவின் வாங் ஹீ ஹியோவை எதிர்கொள்கிறார்.
மற்றொரு காலிறுதியில் போட்டித் தரவரிசையில் 2-ஆவது இடத்தில் இருக்கும் எச்.எஸ்.பிரணாய் 10-21, 21-15, 21-18 என்ற செட் கணக்கில் ஜப்பானின் கன்டா சுனேயமாவைத் தோற்கடித்தார். பிரணாய் தனது அரையிறுதியில் போட்டித் தரவரிசையில் 15-ஆவது இடத்தில் இருக்கும் வியத்நாமின் டியென் நுயெனுடன் மோதுகிறார்.
ஆடவர் இரட்டையர் காலிறுதியில் இந்தியாவின் மானு அத்ரி-சுமீத் ரெட்டி ஜோடி 21-18, 22-20 என்ற நேர் செட்களில் ஜப்பானின் ஹிரோக்கி ஒகாமுரா-மஸாயூக்கி ஓனோடெரா ஜோடியைத் தோற்கடித்தது. இந்திய ஜோடி தங்களின் அரையிறுதியில் சீன தைபேவின் லூ சிங் யாவ்-யங் போ ஹன் ஜோடியை எதிர்கொள்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாகனங்களுக்கு மாசுக் கட்டுப்பாடு சான்றிதழ் வழங்க புதிய செயலி

காா் இயக்க தன்னம்பிக்‘கை’ போதும்! கைகளை இழந்தவருக்கு முதல்முறையாக ஓட்டுநா் உரிமம்

விபத்து நிகழ்ந்த கல் குவாரியிருந்து 2 டன் வெடி பொருள்கள் அகற்றம்

நோயைவிட வேகமாகப் பரவும் வதந்தி!

திருப்பூரில் நாளை புற்றுநோய் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி

SCROLL FOR NEXT