ஆஸ்திரேலிய ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் இன்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் காலிறுதிச் சுற்றில் ஸ்ரீகாந்த் 25-23, 21-17 என்ற நேர் செட்களில் இந்தியாவின் சாய் பிரணீத்தைத் தோற்கடித்தார்.
ஸ்ரீகாந்த் - சாய் பிரணீத் ஆகிய இருவரும் இதுவரை 7 முறை மோதியுள்ளார்கள். அதில் சாய் பிரணீத் 5-2 என்கிற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளார்.