செய்திகள்

தேசிய கீதம் ஒலித்தபோது பபிள்கம் மென்ற விவகாரம்: பர்வேஸ் ரசூல் பதில்!

போட்டி ஆரம்பிக்கும் முன்பு தேசிய கீதம் ஒலிக்கப்பட்டது. அப்போது பர்வேஸ் ரசூல் பபிள் கம் மென்று கொண்டிருந்தது...

எழில்

பர்வேஸ் ரசூல், சமீபத்தில் கான்பூரில் நடைபெற்ற இந்தியா - இங்கிலாந்து இடையேயான டி20 போட்டியில் பங்கேற்றார். 

போட்டி ஆரம்பிக்கும் முன்பு தேசிய கீதம் ஒலிக்கப்பட்டது. அப்போது பர்வேஸ் ரசூல் பபிள் கம் மென்று கொண்டிருந்தது தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. இதைக் கண்டித்துப் பலரும் விமரிசனம் செய்தார்கள். அவர் தேசிய கீதத்தை அவமதித்தாகவும் விமரிசனம் எழுந்தது.

இதுகுறித்து தற்போது பேட்டியளித்துள்ளார் ரசூல். பேட்டியில் அவர் கூறியதாவது: கிரிக்கெட் வீரர்கள் கிரிக்கெட் விளையாட அனுமதியுங்கள். அவர்களை எந்த அரசியலுக்கும் இழுக்கவேண்டாம். விளையாட்டில் கவனம் செலுத்தவே நான் விரும்புகிறேன். இந்தச் சர்ச்சைகள் என்னைப் பாதிக்காமல் பார்த்துக்கொள்கிறேன். நான் வசிக்கும் ஜம்மு காஷ்மிர் பகுதியிலிருந்து ஒருவர் இந்திய அணிக்குத் தேர்வாவதே கடினம். ஆனால் இதுபோன்று நடக்கும்போது வேதனையாக உள்ளது என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு!

வேலூர் தவெக கூட்டத்தில் உயர் நீதிமன்ற விதிமுறைகள் மீறல்! காவல்துறை

தவறாக வழிநடத்தும் ராகுல் மீது வழக்கு: மத்திய அமைச்சர்

சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள்! பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்து; சசிகலா முக்கிய முடிவு!

SCROLL FOR NEXT