செய்திகள்

ஜடேஜாவைக் கொண்டாடவேண்டிய தருணம் இது!

அஸ்வின், சாஹாவுக்குப் பிறகு களமிறங்கியும் அவ்விருவரை விடவும் ஏன் மற்ற முக்கியமான பேட்ஸ்மேன்களை விடவும்...

எழில்

2016-17 சீஸனின் மகத்தான வீரர் ஜடேஜா தான்! ஏன் தெரியுமா?

இந்த சீஸனில் அஸ்வின் 6-வதாக ஆட ஆரம்பித்தபிறகு 8-வது வீரராகவே களமிறங்குகிறார் ஜடேஜா. அதாவது பெரும்பாலும் இந்திய அணியின் இன்னிங்ஸ் முடிகிற வேளையில்தான் பேட்டிங் செய்ய வருவார். இந்த வாய்ப்பில் பேட்டிங்கில் பெரிதாக என்ன சாதித்துவிட முடியும்?

ஆனால் கிடைத்த வாய்ப்புகளில் தன் திறமையை நிரூபித்து இந்த சீஸனின் மகத்தான வீரராக ஆகியுள்ளார் ஜடேஜா.

2016-17 சீஸனில் ஜடேஜா 6 அரை சதங்கள் எடுத்துள்ளார். இந்த சீஸனில் அதிக அரை சதங்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் மற்ற வீரர்களுடன் இணைந்து 2-வது இடம் பிடித்துள்ளார். ஆம், 8-வதாகக் களமிறங்கும் வீரர்!

இந்த சீஸனில் புஜாரா 12 அரை சதங்கள் எடுத்துள்ளார்கள். அடுத்ததாக கோலி, விஜய், ஜடேஜா ஆகிய மூவரும் 6 அரை சதங்கள் எடுத்துள்ளார்கள். உண்மையில் இது மகத்தான சாதனை.

அஸ்வின், சாஹாவுக்குப் பிறகு களமிறங்கியும் அவ்விருவரை விடவும் ஏன் மற்ற முக்கியமான பேட்ஸ்மேன்களை விடவும் அதிக அரை சதங்கள் எடுத்து சாதித்துள்ளார் ஜடேஜா. 

அதுமட்டுமில்லாமல் இந்த சீஸனில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்களின் பட்டியலில் 68 விக்கெட்டுகள் எடுத்து 2-வது இடம் பிடித்துள்ளார்.

ஜடேஜாவைக் கொண்டாடவேண்டிய தருணம் இது!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தி பாரடைஸ் ஃபர்ஸ்ட் சிங்கிள் விடியோ!

நாளை சென்னை வருகிறார் ஞானேஷ்குமார்?

நல்லகண்ணுவுக்கு அதிதீவிர சிகிச்சை : மருத்துவமனை தகவல்

ஃபர்ஹான் அதிரடி: இங்கிலாந்துக்கு 165 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பாகிஸ்தான்!

சென்னைக்கு 16 தேர்தல் கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம்!

SCROLL FOR NEXT