செய்திகள்

விளையாட முடியவில்லை எனில் ஓய்வு எடுத்துக் கொள்ளலாம்: கபில் தேவ் அறிவுரை!

DIN

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து போட்டியிடும் சூழல் நேரிடும்போது, விளையாட முடியாது என கருதும் வீரர்கள், ஓய்வில் செல்லலாம் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது:
அதிக கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்க வேண்டிய சூழல் வரும்போது, வீரர்களால் தொடர்ந்து விளையாட முடியாத பட்சத்தில் ஓய்வில் செல்லலாம். அவர்கள் அனைவரும் தொழில்முறை வீரர்கள். ஒரு தொழில்முறை வீரர், 'என்னால் விளையாட முடியும்; என்னால் விளையாட முடியாது' என்று சொல்லலாம்.
அதிக கிரிக்கெட் போட்டிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று சொல்லும் வீரர்கள் பக்கம் நான் இருக்க மாட்டேன். அவர்கள் சார்பாக என்னால் எந்த விளக்கமும் அளிக்க முடியாது.
இந்திய கிரிக்கெட் அணி கடந்த 15 ஆண்டுகளாக மிகச் சிறப்பாக விளையாடி வருகிறது என்றார் கபில் தேவ்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரணாப்தா என்கிற மந்திரச் சொல் - 190

3 தோற்றங்களில் விக்ரம்?

மும்பையை வீழ்த்திய தில்லி கேப்பிடல்ஸ்; புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம்!

கம்போடியா: ராணுவ தளத்தில் வெடிமருந்து வெடித்ததில் 20 வீரர்கள் பலி

புன்னகை பூ... ஷ்ரத்தா தாஸ்!

SCROLL FOR NEXT