செய்திகள்

தோனியை அணியிலிருந்து நீக்கி தினேஷ் கார்த்திக்குக்கு வாய்ப்பு தருக: முன்னாள் வீரர் கருத்து!

எழில்

தோனியை அணியிலிருந்து நீக்கி தினேஷ் கார்த்திக்குக்கு வாய்ப்பு தரவேண்டும் என்று முன்னாள் வீரர் அகர்கர் ஆலோசனை கூறியுள்ளார்.

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 3-வது டி20 போட்டியில் இந்திய அணியின் தேர்வு குறித்து க்ரிக் இன்ஃபோ இணையத்தளத்தில் தனது கருத்துகளை வழங்கினார் முன்னாள் வீரர் அகர்கர். அப்போது, இந்திய அணியில் தோனியை நீக்கிவிட்டு தினேஷ் கார்த்திக்கைச் சேர்க்கவேண்டும் என்று ஆலோசனை வழங்கினார். அவர் மேலும் கூறியதாவது:

2-வது போட்டியில் தோனி சரியாக ஆடாததால் இதைக் கூறவில்லை. தோனியின் இப்போதைய நிலையை விடவும் தினேஷ் கார்த்திக்கால் முதல் பந்திதிலிருந்தே அடித்தாட முடியும். எனவே அவருக்கு இந்திய அணியில் ஓர் இடம் வழங்கப்பட வேண்டும். சிறந்த 11 வீரர்களையே அணிக்குத் தேர்வு செய்யவேண்டும். விராட் கோலி, தோனியை அணியிலிருந்து நீக்கமாட்டார் என்றுதான் நினைக்கிறேன். ஆனால் தோனிக்குப் பதிலாக தினேஷ் கார்த்திக்கைத் தேர்வு செய்தால் அது 3-வது போட்டிக்கான சிறந்த இந்திய அணியாக இருக்கும். தினேஷ் கார்த்திக் டி20யில் சிறந்த வீரர். அவரைத் தேர்வு செய்து ஒரு நல்ல வாய்ப்பை வழங்கவேண்டும் என்கிற சர்ச்சைக்குரிய கருத்தைக் கூறினார்.

எனினும், ஹைதராபாத்தில் நடைபெறுவதாக இருந்த இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 3-வது டி20 ஆட்டம் மழை காரணமாக கைவிடப்பட்டது. இதனால் 3 போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய ஐபேட் விலை என்ன?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT