இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், முன்னாள் பயிற்சியாளருமான அனில் கும்ப்ளேவுக்கு செவ்வாய்க்கிழமை 47-ஆவது பிறந்த நாளாகும். அதையொட்டி அவருக்கு சுட்டுரையில் வாழ்த்துகள் குவிந்தன.
பிசிசிஐ சார்பில் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், இந்திய அணியின் முன்னாள் பெளலர் அனில் கும்ப்ளேவுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் என கூறப்பட்டிருந்தது. இதையடுத்து கோபமடைந்த அவருடைய ரசிகர்கள், அவர் பெளலர் மட்டும்தானா? முன்னாள் கேப்டன் இல்லையா? அதிக விக்கெட் வீழ்த்திய இந்தியர் இல்லையா? என பல கேள்விகளை எழுப்பி பிசிசிஐ மீது சாடினர்.
அதைத் தொடர்ந்து தனது பழைய பதிவை நீக்கிய பிசிசிஐ, முன்னாள் கேப்டனும், ஜாம்பவானுமான கும்ப்ளேவுக்கு வாழ்த்துகள் என புதிய பதிவை வெளியிட்டது.