ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியின் "சி' பிரிவில் தமிழகம்-மும்பை அணிகள் மோதும் ஆட்டம் மும்பையில் இன்று தொடங்கியுள்ளது.
டாஸ் வென்ற மும்பை அணி, பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது. ஆரம்பம் முதல் அதிரடியாக விளையாடி வரும் மும்பை அணி 18 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 97 ரன்கள் எடுத்துள்ளது.
தமிழக அணி முன்னதாக ஆந்திரம் மற்றும் திரிபுரா அணிகளுக்கு எதிரான ஆட்டத்தை சமன் செய்ததன் மூலம் 4 புள்ளிகளைப் பெற்றுள்ளது. மும்பை அணி தனது முதல் ஆட்டத்தில் மத்தியப் பிரதேசத்துக்கு எதிரான வெற்றியின் மூலம் 3 புள்ளிகளைப் பெற்றுள்ளது. முந்தைய ஆட்டங்களில் வெற்றி பெறாத தமிழக அணி, இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
மும்பை அணியைப் பொருத்த வரையில், கேப்டன் ஆதித்யா தாரே, ஷ்ரேயாஸ் ஐயர், பிருத்வி ஷா, தவல் குல்கர்னி ஆகியோர் பலம் சேர்க்கின்றனர். தமிழக அணியைப் பொருத்த வரையில், காயம் காரணமாக முந்தைய ஆட்டத்தில் பங்கேற்காத முரளி விஜய், இந்த ஆட்டத்தில் அணிக்குத் திரும்பியுள்ளார். அஸ்வின் பந்துவீச்சில் பலம் சேர்க்கிறார்.