முகப்பு
செய்திகள்

இலங்கையில் இந்திய U-17  கிரிக்கெட் வீரர் நீச்சல் குளத்தில் மூழ்கி உயிரிழப்பு!

இலங்கை சென்றுள்ள 17 வயதுக்குட்பட்ட இந்திய கிரிக்கெட் அணியைச் சேர்ந்த வீரர் ஒருவர், நீச்சல் குளத்தில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்...

Updated On : 29 ஜனவரி, 2024 at 4:49 PM
பகிர்:

இலங்கை சென்றுள்ள 17 வயதுக்குட்பட்ட இந்திய கிரிக்கெட் அணியைச் சேர்ந்த வீரர் ஒருவர், நீச்சல் குளத்தில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

U-17 போட்டியில் கலந்துகொள்வதற்காக 19 பேர் கொண்ட இந்திய அணியினர் இலங்கை சென்றுள்ளார்கள்.  

பமுனுகமாவில் உள்ள விடுதியில் அவர்கள் தங்கியுள்ளார்கள். இந்நிலையில் 4 வீரர்கள் நீச்சல் குளத்தில் நீச்சலில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது, ஒருவர் நீச்சல் குளத்தில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். 12 வயதுடைய அந்த கிரிக்கெட் வீரர் குஜராத்தைச் சேர்ந்தவர் என்று தகவல்கள் கிடைத்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.