ஜப்பான் ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியின் காலிறுதியில் இந்தியாவின் ஸ்ரீகாந்த், எச்.எஸ்.பிரணாய் ஆகியோர் தோல்வி கண்டனர்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இந்தப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் காலிறுதியில் ஸ்ரீகாந்த் 17-21, 17-21 என்ற நேர் செட்களில் போட்டித் தரவரிசையில் 3-ஆவது இடத்தில் இருக்கும் டென்மார்க்கின் விக்டர் ஆக்ùஸல்சனிடம் தோல்வி கண்டார். விக்டருடன் இதுவரை 5 முறை நேருக்கு நேர் மோதியுள்ள ஸ்ரீகாந்த், 3-ஆவது தோல்வியை சந்தித்துள்ளார்.
மற்றொரு காலிறுதியில் எச்.எஸ்.பிரணாய் 15-21, 14-21 என்ற நேர் செட்களில் போட்டித் தரவரிசையில் 3-ஆவது இடத்தில் உள்ள சீனாவின் ஷி யூகியிடம் தோல்வி கண்டார்.
அரையிறுதியில் பிரணவ் ஜோடி: கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் பிரணவ் சோப்ரா-சிக்கி ரெட்டி ஜோடி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. இந்த ஜோடி தங்களின் காலிறுதியில் 21-19, 9-21, 21-19 என்ற செட் கணக்கில் தென் கொரியாவின் சியூங் ஜே சியோ-கிம் ஹா நா ஜோடியைத் தோற்கடித்தது.
பிரணவ் சோப்ரா-சிக்கி ரெட்டி ஜோடி தங்களின் அரையிறுதியில் ஜப்பானின் டகுரோ ஹோகி-சயாக்கா ஹிரோட்டா ஜோடியை சந்திக்கிறது.