செய்திகள்

லார்ட்ஸ் டி20: ஐபிஎல்-லில் அதிரடியாக விளையாடும் ரஸ்ஸல் மேற்கிந்தியத் தீவுகள் அணியில் சேர்ப்பு!

எழில்

லார்ட்ஸில் மே 31 அன்று மேற்கிந்தியத் தீவுகள் - உலக லெவன் அணிகளுக்கு இடையிலான டி20 ஆட்டம் நடைபெறவுள்ளது. கடந்த வருடம், மேற்கிந்தியத் தீவுகளில் புயலால் பாதிப்புக்கு உள்ளான கிரிக்கெட் மைதானங்களைச் சீரமைக்க நிதி திரட்டுவதற்காக இந்தப் போட்டி நடைபெறவுள்ளது. 

இந்த ஆட்டத்துக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், சர்வதேச அந்தஸ்து அளித்துள்ளது. உலக லெவன் அணிக்கு இங்கிலாந்தின் இயன் மார்கன் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். 

இந்த டி20 ஆட்டத்தில் விளையாடவுள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல்-லில் சிறப்பாக விளையாடி வரும் ஆண்ட்ரே ரஸல் இந்த அணியில் இடம்பிடித்துள்ளார். அவர் கடைசியாக 2016 ஆகஸ்டில் மே.இ. அணியில் இடம்பிடித்தார். கெய்ல், சாமுவேல்ஸ், லீவிஸ் போன்ற வீரர்களும் அணியில் இடம்பிடித்துள்ளார்கள்.

மேற்கிந்தியத் தீவுகள் அணி

கார்லோஸ் பிரத்வெயிட் (கேப்டன்), ரயத் அம்ரிட், ஆண்ட்ரே பிளெட்சர், கிறிஸ் கெய்ல், எவின் லீவிஸ் ஆஸ்லே நர்ஸ், கீமோ பால், ரோவ்மேன் பவல், தினேஷ் ராம்தின் (விக்கெட் கீப்பர்), ஆண்ட்ரே ரஸ்ஸல், சாமுவேல் பத்ரீ, மார்லன் சாமுவேல்ஸ், கெஸ்ரிக் வில்லியம்ஸ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

நீ, நீயாகவே இரு, உலகம் அனுசரித்துப் போகும்! எதிர்நீச்சல் ஜனனிதான்...

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

SCROLL FOR NEXT